தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீலாது நபியை முன்னிட்டு கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மீலாது நபியை முன்னிட்டு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொதுச்செயலாளர்):. நபிகள் நாயகம் போதித்த சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள். எனவே, அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம். இந்தப் புனிதம் மிக்க நன்னாளில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Advertisement

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பூமியில் உள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் என்றும் போதிக்கிறார் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளில் கோபத்தை அடக்கி எல்லோரிடமும் கருணை காட்ட நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

செல்வபெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாம் இப்பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் நெஞ்சினிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி (பாமக தலைவர்): உண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதில் அனைவரும் நபிகள் நாயகத்தை முன்னோடியாக ஏற்க வேண்டும். மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைந்ததாக மாற வாழ்த்துக்கள்.

Advertisement