தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோ: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

நேற்று வட அமெரிக்காவின் மெக்சிகோவில் சோனோரா மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ நகரில் உள்ள வால்டோ கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சோனோரா ஆளுநர் அல்போன்சோ துராசோ சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சோனோரா ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு ஆதரவு குழுவை அனுப்புமாறு உள்துறை செயலாளருக்கு அறிவுர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் ஏற்பட்ட நச்சு வாயுக்களை சுவாசிப்பதால் இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News