மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்றும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக, நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 11வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement 
                
 
            
        