தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Advertisement

சேலம்: தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 18,610 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து மாலை வினாடிக்கு 28,784 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 18,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்ப மீண்டும் வாய்ப்புள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.64 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இதே நிலை நீடித்தால் இன்று அணை மீண்டும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவான 120 அடியை அணையின் எட்டியுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக 22,500 கன அடியும், உபரி போக்கி வழியாக 8,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தலில் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

 

Advertisement