தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியானது.

Advertisement

இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிட்டது. காலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.09 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,08,529 கன அடியில் இருந்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மொத்தமாக 90,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 21,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகு வழியாக 68,700 கன அடி நீர் மற்றும் கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.614 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement