நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. காலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.09 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,08,529 கன அடியில் இருந்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மொத்தமாக 90,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 21,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகு வழியாக 68,700 கன அடி நீர் மற்றும் கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.614 டி.எம்.சி.யாக உள்ளது
Advertisement
Advertisement