தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகிலுள்ள ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்வதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

Advertisement

இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்குள் உலா வந்தது. அங்கு சாலையோரம் இருந்த புற்களை பறித்து உண்டது. அதிகாலை நேரம் வீட்டைவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானையை கண்டு அச்சமடைந்தனர். இது குறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement