தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க 220 ஏசி மினி பஸ்கள்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 220 ஏசி மினி பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கலைஞர் முதல்வராக இருந்தபோது மெட்ரோ ரயில் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டன. அந்தவகையில் கடந்த 2015ம் ஆண்டு விம்கோ நகர் - விமானம் நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் வரை அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ சேவை, தற்போது பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்ட உள்ளன.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் 40 கோடி முறை மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கும் வசதியாக, இலவச சைக்கிள், வாடகை பைக், ஆட்டோ, இ-சைக்கிள் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை நடைமுறையில் உள்ளன. இதில் மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக 11 வழித்தடங்களில் 22 சிறிய பேருந்துகள் மெட்ரோ நிலையங்களுக்கு இணைப்பாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 220 ஏசி மினி பஸ்கள் மூலம் மெட்ரோ நிலையங்களை இணைக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. 11 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 6 மீட்டர் நீளம் கொண்ட புதிய மினி ஏசி மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய ஏசி மின்சார பேருந்து சேவையால் கூட்ட நெரிசல் குறையும், பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement