தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோ ரயில் நிராகரிப்பு: ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: மதுரையை சேர்ந்த கதிர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு தயாரித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த அறிக்கையை நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த ஒன்றிய அரசு சமீபத்தில், மெட்ரோ ரயில் கொள்கையின்படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும் எனக்கூறி மதுரை, கோவைக்கான ெமட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது. மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மதுரையில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை சரி செய்து மீண்டும் அனுப்ப தமிழக திட்டமிடல் மேம்பாட்டு துறையின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர், மதுரை கலெக்டர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச. 16க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement

Related News