தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோ ரயில் நிறுவன கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தள்ளிவைப்பு: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: மெட்ரோ ரயில் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணிகளை தள்ளி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisement

டெண்டர் விடப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மெட்ரோ ரயில் ஆணையரிடம் இரு மாதங்களுக்கு பணிகளை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்ததால் தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் (பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, குருநானக் கல்லூரி) வேளச்சேரி மெயின் ரோடு மேம்பாலத்துடன் சுமார் 650 மீட்டர் தொலைவுக்கு ஒன்றாக வருகிறது. இதனால், மெட்ரோ ரயிலின் வடிவமைப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

முதலில் அடித்தளமும் மேம்பாலமும் கட்டப்பட்ட பிறகு, அதற்கு மேலே மெட்ரோ பாதை அமைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பணியை தொடங்கும் நிறுவனத்திற்கு தேவையான கூடுதல் நிதி வழங்கப்படும். ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Advertisement

Related News