தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 3 மாதத்தில் 1.02 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலைகள், தெருக்கள், கடற்கரைகள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், பூங்காக்கள், மயான பூமிகள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தினசரி சராசரியாக 6,500 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றி திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மேலும், நாள்தோறும் சராசரியாக 1000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Advertisement

இதில், இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5) திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6) ஆகிய இரண்டு மண்டலங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 19.07.2025 முதல் 11.10.2025 வரையிலான நாட்களில் மண்டலம்-5ல் 62,224 மெட்ரிக் டன், மண்டலம்-6ல் 39478 மெட்ரிக் டன் என மொத்தம் 1. 02 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றி கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மண்டலம்-5 மற்றும் மண்டலம்-6ல் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 800 மின்கல வாகனங்கள், குப்பைகள் சேகரிப்பதற்காக 5 டன் கொள்ளளவில் 9 டிப்பர் லாரிகள், 8 கனமீட்டர் கொள்ளளவில் 36 காம்பாக்டர் வாகனங்கள், 14 கனமீட்டர் கொள்ளளவில் 28 காம்பாக்டர் வாகனங்கள், 18 கனமீட்டர் கொள்ளளவில் 4 காம்பாக்டர் வாகனங்கள், 250 டாட்டா ஏஸ் வாகனங்கள், 12 கனரக வாகனங்கள், 6 ஜேசிபி இயந்திரங்கள் என மொத்தம் 1145 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சுழற்சி முறையில் கண்காணித்திட உரிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது கண்காணிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டு மக்களுடைய சுகாதாரத்தை பேணும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Related News