தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மெஸ்சி இந்தியா வருகை ரத்து

 

திருவனந்தபுரம்: உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது. இதையடுத்து கேப்டன் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் இப்போட்டி நடக்கும் என கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்தார். ஆனால் அர்ஜென்டினா அணி, `அக்டோபர் மாதம் சீனாவில் நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளோம். 2026, மார்ச் மாதம் கேரளா வருகிறோம்’ என தெரிவித்துள்ளது.

இதை ஏற்க கேரள அரசு மறுத்துள்ளது. இதனால் மெஸ்சி வருகை ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி அப்துரஹிமான் கூறுகையில், ``அர்ஜென்டினா அணி கேரளா வருவதற்கு தேவையான நிதி, அவர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்போது, மாநில அரசுடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, 2026ல் வருவதாக சொல்கின்றனர். இதனால் ஏற்படும் நிதி இழப்புக்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

Related News