தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நினைவு நாளை முன்னிட்டு பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் தமிழ் மின்நூலகத்தில் பதிவேற்றம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை கொண்டிருந்த தமிழ் மின் நூலகம் அண்மையில் தகவல் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளடக்கங்களில் ஒளிப்படங்கள், ஒலித் தொகுப்புகள், காணொலிகள், நிலவரைபடங்கள், தொல்லியல் தொடர்பான தகவல்கள் ஆகியவையும் புதிதாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு பல்லூடகப் பயன்பாட்டுப் பெட்டகமாக மின் நூலகம் உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அந்த கையெழுத்துப் பிரதிகள் மின் நூலகத்தில் ஒரு தனித் தொகுப்பாகப் பதிவேற்றம் பெற்றுள்ளன. பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றம் பெற்றதில் பங்குவகித்த ஆய்வாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். பாரதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழ்த் துறை, வரலாற்றுத் துறை ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய தொகுப்பு இது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement