தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகமலை வனப்பகுதியில் தொடரும் மழை: சின்ன சுருளி அருவியில் குளிக்க 7வது நாளாக தடை

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுருளி அருவியானது தென் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி ஆன்மீக ஸ்தலமாகவும் உள்ளது. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அருவியில் புனிதநீராடுவது வழக்கம்.

Advertisement

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 17ம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் தொடர்ச்சியாக தூவானம், அரிசிப்பாறை உள்ளிட்ட மேகமலை வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சுருளி அருவியில் அக்டோபர்.18ம் தேதி அன்று கடும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடைவிதித்தனர்.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை வனப்பகுதியில் மழை அளவு குறையாமல் அருவியில் நீர்வரத்து தொடர்வதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. வனத்துறை தரப்பில் தெரிவித்ததில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறையும் வரை தடை நீடிக்கும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என யாரும் சுருளி அருவிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement