தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேகதாது அணையால் தமிழகத்துக்கே அதிக பலன்: டி.கே.சிவகுமார் சொல்கிறார்

பெங்களூரு: தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நீர் விவகாரம் பல ஆண்டு காலமாக நீடித்துவரும் நிலையில், கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டிவருகிறது. ஆனால் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேகதாது அணை கட்ட ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. இந்நிலையில், மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கே அதிக உதவியாக இருக்கும். மேகதாது அணையில் நீரை தேக்கிவைப்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு சரியான நேரத்தில் கர்நாடகாவால் நீர் திறந்துவிட முடியும். பெங்களூருவில் இருக்கும் கன்னடர்கள், தமிழர்கள், தெலுங்கர்கள் ஆகிய அனைவரும் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று பயனடைவர்.
Advertisement

எனவே அவர்கள் அனைவரும் மேகதாது அணை திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். காவிரி விவகாரம் குறித்து நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியதுபோல், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மேகதாது அணை தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் என்பதால், இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். கர்நாடகாவில் நல்ல மழை பெய்துவருவதால் தமிழ்நாட்டில் அதிக நீர் திறக்கப்படும் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

 

Advertisement

Related News