தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பெய்து வரும் கனமழை காரணமாக மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை அருவி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அருகே அமைந்துள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மேகமலை அருவிக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மாநில எல்கையை ஒட்டிய மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீர் ஆனதும் மீண்டும் தடை விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியில் தடை பாதிக்கப்பட்டுள்ளதை அறியாமல் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர்.