தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 2 மெகா நீர்மூழ்கி கப்பல் திட்டம் விரைவில் ஒப்பந்தம்

புதுடெல்லி: நீண்டகாலமாக காத்திருக்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

சீனா தனது கடற்படை வலிமையை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கடலுக்கடியில் போர் திறனை அதிகரிக்க இந்தியா 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை தயாரித்துள்ளது.

இதன்படி, ரூ.36 ஆயிரம் கோடி செலவில் பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனமான நேவல் குரூப்பிடம் இருந்து 3 ஸ்கார்பீயன் நீர் மூழ்கிக் கப்பல்களும், ரூ.65 ஆயிரம் கோடி செலவில் ஜெர்மனியனின் தைசென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 6 டீசல்-மின்சார ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு திட்டத்திலும் மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இதில் முதல் திட்டத்திற்கு 2 ஆண்டுக்கு முன்பும், 2வது திட்டத்திற்கு 2021ம் ஆண்டிலும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இவ்விரு திட்டங்களும் அடுத்த 6 முதல் 9 மாதத்தில் இறுதி செய்யப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Advertisement

Related News