தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூட்டுறவு சங்கம் பெயரில் மெகா மோசடி; பாலிவுட் நடிகர்கள் 2 பேர் மீது வழக்கு: கோடிக்கணக்கில் சுருட்டியது அம்பலம்

லக்னோ: பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த கூட்டுறவு சங்க விவகாரத்தில், பிரபல பாலிவுட் நடிகர்கள் ஸ்ரேயாஸ் தல்படே, அலோக் நாத் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் செயல்பட்டு வந்த ‘லோனி அர்பன் மல்டி-ஸ்டேட் கிரெடிட் அண்ட் த்ரிஃப்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி’ என்ற கூட்டுறவு சங்கம், தங்களிடம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.

Advertisement

இந்தத் திட்டங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்படே விளம்பரதாரராகவும், அலோக் நாத் விளம்பரத் தூதராகவும் முன்னிறுத்தப்பட்டனர். இவர்களின் புகழைப் பயன்படுத்தி, கிராமப்புற மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2023ம் ஆண்டே முதலீட்டாளர்களுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்திய அந்த நிறுவனம், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூடப்பட்டதுடன், அதன் நிர்வாகிகள் தலைமறைவாகினர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துக் கொடுத்த முகவர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்காததால் அளித்த புகாரின் பேரில், தற்போது நடிகர்கள் ஸ்ரேயாஸ் தல்படே, அலோக் நாத் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே மோசடி தொடர்பாக ஏற்கெனவே பதியப்பட்ட வழக்குகளில், உச்ச நீதிமன்றம் இந்த இரண்டு நடிகர்களுக்கும் கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியிருந்தது. இருப்பினும், தற்போதைய விசாரணையை அந்த உத்தரவு தடுக்காது என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement

Related News