தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகள் தொடர்பான ஆவணங்களைங்களை தாக்கல் செய்க: ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களின் சொத்து தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர்கள் சபை ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு, முறையாக பராமரித்து, கோயில் புதுபிப்பு பணிகளை முடித்து விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

Advertisement

இதையடுத்து இந்த வழக்கு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 2021ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் சொத்துக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வரும் வியாழக்கிழமை (செப்.4) விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா மற்றும் குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சொத்துகள் மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோயில் குடமுழுக்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என கோயில் இணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், சொத்துகள் குறித்து தெளிவான விவரங்கள் இணை ஆணையரின் அறிக்கையில் இல்லை. கோயில் இணை ஆணையரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என கூறி அறநிலையத்துறையின் அறிக்கையை அதிகாரிகளிடம் நீதிபதிகள் திருப்பி அளித்தனர்.

இதையடுத்து கோயில் சொத்து எங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என சொன்னால்தான் அதிகாரிகளுக்கு தெரியுமா? என்றும், அறநிலையத்துறையே ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே? என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களின் சொத்து தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கை அக்.7க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement

Related News