தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவ குணம் மிக்க சங்குவாயன் திருக்கை.. பாம்பனில் அரிய மீன் வரத்தால் அமோக விற்பனை!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், மீன்பிடிப்பு பருவத்தில் எதிர்பாராத விதமாக அதிகளவில் சங்குவாயன் திருக்கை மீன்கள் கிடைத்துள்ளன. பாம்பன் கடல் பகுதியில் பிடிபடும் இறால், கனவாய், நண்டு, சிங்கி போன்ற கடல் உணவுகள் வெளிநாடுகளுக்கும், உள்ளுர் மற்றும் கேரளா வியாபாரிகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதிக சந்தை மதிப்பை ஈட்டி தருகின்றனர். இந்த சூழலில் வரத்து அதிகரித்துள்ள சங்குவாயன் திருக்கை மீனவர்களின் வருமானத்தை பெருகியுள்ளது.

Advertisement

சங்குவாயன் திருக்கை இணைத்தை சேர்ந்த இந்த மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 100 அடி முதல் 200 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்து வாழக்கூடியவை. திருக்கை இணைகளையே மிகவும் அறியதாக பிடிபடும் இந்த மீன், தற்போது சென்ற ஒவ்வொரு படகுகளுக்கு சுமார் ஒன்று முதல் இரண்டு டன் எடை அளவில் மீன் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திருக்கை மீன்கள் வவ்வால் போன்ற முகத்தோற்றத்தையும், ஊசி போன்ற வாயை கொண்டிருக்கும். மேலும் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பயன்படும், மிக நீளமான மெல்லிய வாலுடனும் இருக்கும்.

பொதுவாகவே திருக்கை நல்ல சுவை கொண்டவை இருந்தாலும். சங்குவாயன் திருக்கை சதை மற்ற மீன்களை விட சற்று கடினமாக இருக்கும். இதன் மருத்துவ குணங்களுக்கான மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக இந்த மீனை உண்ணுவதன் மூலம் இடுப்பு வலி குணமாகும். கர்பிணிப்பெண்கள் சாப்பிட்டால் இது மிகவும் நல்லது என்றும் நம்புகின்றனர். பாமன் துறைமுகத்தில் இந்த அதிகவரது காரணமாக மொத்த வியாபாரிகள் சங்குவாயான் திருக்கை ஏலத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

இந்த அரியவகை மீனுக்கு கிடைத்த நல்ல விலை. மீனவர்களுக்கு மீன்பிடி பருவம் தீர்த்திகரமாக அமைந்திருப்பதை கூறுகிறது. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் யானை திருக்கை, குருவி திருக்கை, சோனகத்திரிகை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட 10க்கும் அதிகமான திருக்கை வகைகள் மீன்கள் காணப்படுகின்றனர். இது போன்ற அரிய வகை மீன்கள் கிடைப்பது மீனவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

Advertisement

Related News