தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியில் மருத்துவப்படிப்பு: மண்ணைக் கவ்வியது மத்திய பிரதேச மாடல்; ஒரு மாணவர் கூட சீண்டவில்லை

ஆரம்பக் கல்வி முதலே இந்தியைத் திணிக்க வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு படு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் நிர்ப்பந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு முயற்சி சிறிது கூட எடுபடவில்லை. இவ்வளவு ஏன்… பாஜ கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் கூட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாமல் போய் விட்டது. மராத்தி மொழி உணர்வு கிளர்ந்து விட்டு எழுந்ததால், இந்தித் திணிப்பு அரசாணைகளை ரத்து செய்யும் நிலைக்கு பட்நவிஸ் தலைமையிலான பாஜ கூட்டணி அரசு தள்ளப்பட்டது.
Advertisement

இந்த நிலையில், இந்தி ஆட்சி மொழியாக உள்ள மத்திய பிரதேசத்திலேயே, இந்தி மொழி வழி மருத்துவக் கல்விக்கு வரவேற்பு இல்லாமல் போனது, பாஜ அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி வழி மருத்துவக் கல்வியை 2022 அக்டோபர் 12ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

ஏறக்குறைய மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்தி வழி மருத்துவக் கல்விக்கு எந்த வரவேற்பும் இல்லாதது அம்பலம் ஆகியுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி, அந்த மாநிலத்தில் ஒரு மாணவர் கூட எம்பிபிஎஸ் தேர்வை இந்தி மொழியில் எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்தி வழி மருத்துவக் கல்விக்காக மத்தியப் பிரதேச அரசு சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. பள்ளிப் பருவத்தில் இருந்தே இந்தி வழியில் படித்த மாணாக்கர்கள் மருத்துவப் படிப்பை தொடர்ந்து படிக்க இடையூறு இல்லாத வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஒரு மாணவர் கூட இந்த திட்டத்தை ஏற்கவில்லை என்பது மேற்கண்ட தகவல் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

இது குறித்து போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் அருணா குமார் கூறுகையில், ‘‘இந்தி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கற்பித்தல் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழவில்லை. வகுப்புகளில் விரிவுரையாளர்கள் பாடம் நடத்தும்போது இந்தியில் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் துவங்க இருக்கிறது’’, என்றார்.

மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்தி மொழிப் பாடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் இந்தி வழியில் கற்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கடந்த மூன்றாண்டுகளில் ஒரு மாணவர் கூட இந்தியில் தேர்வு எழுதவில்லை’’, என்றார். இந்தி மொழி வழிக் கல்வியிலும் இந்தித் திணிப்பிலும் தீவிரம் காட்டி வரும் ஒன்றிய அரசுக்கு, இந்தி ஆட்சி மொழியாக உள்ள மத்தியப் பிரேதசத்திலேயே இந்தி வழி மருத்துவப் படிப்புக்கு வரவேற்பு இல்லாதது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இந்தி புத்தகத்தில் ஆங்கில பதங்கள்

இந்தி வழி மருத்துவப்படிப்பு குறித்து மத்திய பிரதேச மாணவர்கள் சிலர் கூறுகையில், ‘‘பாடப்புத்தகங்கள் இந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வாங்கிப் பார்க்கும்போது, பெரும்பாலான மருத்துவப் பதங்கள் ஆங்கிலத்தில் தான் இருந்தன. இந்தி மொழியில் இல்லை, என்றனர்.

இந்தி வழியில் மருத்துவக் கல்வி வழங்கும் மாநிலங்கள்

இந்தி இன்ஜி. படிப்பும் அம்பேல்

மருத்துவப் படிப்பைப் போல் இந்தி மொழியில் இன்ஜினியரிங் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அதுவும் படு தோல்வியில் முடிந்தது. கடந்த 2022-23 கல்வியாண்டில் போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 1,200 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் 150 பேர் இந்தி வழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்தனர். 4 ஆண்டு படிப்பு முடிவில் பலர் பாதியிலேயே வெளியேறி விட்டனர். 4ம் ஆண்டில் வெறும் 27 மாணவர்களே மிஞ்சினர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நாடு

Advertisement