விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர்
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் 3-வது ஆசிய இளைஞர் விளையாட்டு தடகளப் போட்டி மற்றும் 4-வது தெற்காசிய (SAAF) சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 40.50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கி மேலும் பல பதக்கங்கள் வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3வது ஆசிய இளைஞர் விளையாட்டு தடகளப் போட்டி மற்றும் 4வது தெற்காசிய (SAAF) சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இன்று (29.10.2025) மொத்தம் 40.50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கி, மேலும் பல பதக்கங்கள் வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து 2025 அக்டோபர் 24 முதல் 26 வரை ராஞ்சியில் நடைபெற்ற 4வது தெற்காசிய (SAAF) சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் பேட்டி பிரிவில் புதிய போட்டி சாதனையுடன் தங்க பதக்கம் வென்ற தடகள வீரர் ஆர்.மானவ் அவர்களுக்கு 2,00,000 ரூபாய்க்கான காசோலை, 100 மீட்டர் தடை தாண்டும் பிரிவில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கே.நந்தினி அவர்களுக்கு 2,00,000 ரூபாய்க்கான காசோலை, 4x400 மீட்டர் (கலப்பு) ரிலே பிரிவில் தங்கப் பதக்கம், 4x400 மீட்டர் (பெண்கள்) ரிலே பிரிவில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடைதாண்டுதல் பிரிவில் வெண்கல பதக்கம் என 4 பதக்கங்கள் வென்ற ஒலிம்பா ஸ்டெஃபி அவர்களுக்கு 6,50,000 ரூபாய்க்கான காசோலை, 4x400 மீ (ஆண்கள்) ரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் எம்.ஷரன் அவர்களுக்கு 1,50,000 ரூபாய்க்கான காசோலை, டிரிபிள் ஜம்ப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் வி. தினேஷ் அவர்களுக்கு 1,50,000 ரூபாய்க்கான காசோலை, உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஆதர்ஷ் ராம் அவர்களுக்கு 1,00,000 ரூபாய்க்கான காசோலை, நீளம் தாண்டுல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பவானியாதவ் பகவ் அவர்களுக்கு 1,00,000 ரூபாய்க்கான காசோலை என தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற 7 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 15.50 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் 3-வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் மெட்லிரிலே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற எட்வினாஜேசன் அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக அவர்களுக்கு உயரிய சாம்பியன் 20.00 லட்சம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை நிதியிலிருந்து 5.00 லட்சம் என மொத்தம் 25,00,000 ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.இன்றைய தினம் பதக்கங்கள் வென்ற 8 விளையாட்டு வீரர் வீரங்கனைகளுக்கு மொத்தம் தொகை 40,50,000 ரூபாய்க்கான ஊக்கத்தொகை காசோலைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.