தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு எதிரொலி: ஆலப்புழாவில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை நீடிப்பு

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மே 8ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்துப் பண்ணைகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துகள் திடீர் திடீரென செத்தன. இதையடுத்து கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் உள்ள வாத்துகள் கொன்று எரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோய் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் நோய் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. ஆகவே ஆலப்புழா, தகழி, நெடுமுடி, சம்பக்குளம், எடத்துவா உள்பட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மே 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலப்புழா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement

Related News