மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு
சென்னை: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கபட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கம். மல்லை சத்யா ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் நிரந்தரமாக நீக்கபட்டுள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார். இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்கவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கபட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி விளக்கம் கேட்டு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் குறித்து மல்லை சத்யா உரிய விளக்கம் அளிக்கவில்லை. பொதுவெளியில் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வந்ததால் நீக்கபட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மல்லை சத்யா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.