தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதிமுகவில் சேர்ந்த மாஜி எம்எல்ஏக்கு 2 நாள் கழித்து பாஜவில் பதவி: நெல்லையில் நயினாரின் கூத்து

 

Advertisement

நெல்லை: பாளையங்கோட்டை தொகுதியில் 1989ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் தாயகம் குருநாதன்.. பின்னர் வைகோவுடன் மதிமுகவில் சேர்ந்த அவர் கடந்த 2024ல் மதிமுகவில் இருந்து விலகி அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த நவ.26ம் தேதி பாஜவில் இருந்து விலகிய குருநாதன், வைகோ முன்னிலையில் மீண்டும் மதிமுகவில் இணைந்தார்.

இதுகுறித்த அறிவிப்பும் மதிமுக சார்பில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் கடந்த 28ம் தேதி பாஜ வழக்கறிஞர் பிரிவு, கல்வியாளர் பிரிவு புதிய நிர்வாகிகள் பட்டியலை பாஜ மாநில தலைவரும், நெல்லை தொகுதியின் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். இந்த அறிவிப்பில் மதிமுகவில் 26ம் தேதி இணைந்த முன்னாள் எம்எல்ஏ குருநாதன் பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த பட்டியலை பார்த்த நெல்லை மாவட்ட பாஜவினரே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

பாஜவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தவருக்கு 2 நாட்கள் கழித்து பாஜவில் பதவி வழங்கியது எப்படி என கேள்வி எழுந்தது. அதுவும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையைச் சேர்ந்தவர். நெல்லை தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூட எந்த கட்சியில் தற்போது இருக்கின்றனர் எனத் தெரியாமல் அறிவிப்பு எப்படி வெளியானது என பாஜவைச் சேர்ந்தவர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் நெல்லை பாஜ நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement

Related News