தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சி தொடங்கினார்

 

Advertisement

சென்னை: தனிக்கட்சி தொடங்கினாலும், தேர்தலில் தனது ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று ஏற்கெனவே மல்லை சத்யா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம் போல, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் இந்தக் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை, அடையாறில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்தார் மல்லை சத்யா. கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் புதிய அரசியல் இயக்கத்தின் பெயரை உருவாக்கி உள்ளனர்.

தனிக்கட்சி தொடங்கினாலும், தேர்தலில் தனது ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று ஏற்கெனவே மல்லை சத்யா அறிவித்து இருந்தார். இதுகுறித்துப் பேசி இருந்த அவர், ’’திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மதிமுகவில் துரை வைகோ உடனான மோதல் காரணமாக, துணை பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் நீக்கினார். இதைத் தொடர்ந்து புதுக் கட்சியை மல்லை சத்யா தொடங்கி உள்ளார்.

Advertisement