தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடுதுறை ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய ஆர்டிஓ அலுவலக கட்டிடம்

*அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர்
Advertisement

மயிலாடுதுறை : மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு அரசாணை மூலம் ரூபாய் 3.90 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேற்படி அரசாணையின்படி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் தரைதளத்தில் 4203.93 ச.அடி(390.70 ச.மீ)பரப்பளவிலும், முதல்தளத்தில் 4203.93 ச.அடி (390.70 ச.மீ)பரப்பளவிலும் மொத்தம் 8407.878.அடி (781.40 ச.மீ) பரப்பளவில் இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

மேலும் தரை தளம் ஒன்றில் துணை கலெக்டர் அறை, நீதிமன்ற அறை, மின்சார அறை, லிஃப்ட், அலுவலக அறை, பெண் பணியாளர் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, நுழைவு லாபி, படிகள், உணவு அறை, தனிப்பட்ட உதவியாளர் அறை, போர்டிகோ மற்றும் முதல் தளத்தில் பதிவு அறை1, கணினி அறை, பதிவு அறை 2, ஆண் பணியாளர் கழிப்பறை, மின்சார அறை, லிஃட் லாபி, படிக்கட்டு படிகள், சந்திப்பு அறை என இரண்டு தளங்கள் மற்றும் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட உள்ளது.

ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை வகிக்க, எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜகுமார ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ உமாமகேஷ்வரி.

ஆர்டிஓ (பொ) அர்ச்சனா, நகர்மன்ற தலைவர் செல்வராஜ். நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி நர்மதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement