தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாட்லாம்பட்டி அருகே மூடிக்கிடக்கும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு

*பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
Advertisement

தர்மபுரி : கன்னிப்பட்டியில் மூடிக்கிடக்கும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து, மண்புழு உரம் தயாரிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், மாட்லாம்பட்டி அருகே உள்ள கன்னிப்பட்டி பகுதியில், மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு, தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இக்கிடங்கில் ஊராட்சி சார்பில், வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சி, பாப்பாரப்பட்டி உள்பட பல ஊராட்சி நிர்வாகங்களில் மண்புழு உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை விற்பனை செய்து வருகிறது.

அதே போல், ஊராட்சி நிர்வாகம், குப்பபைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு விவசாயிகளுக்கு தேவையான உரம் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கன்னிப்பட்டி பகுதியில், சில ஆண்டுகளாக மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. இதனால் உரம் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மூடிக்கிடக்கும் மண்புழு உரம் தயாரிப்பு கிடங்கை, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement