தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதிதா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மாணவர்கள் உயர்பதவிக்கு வர வேண்டும்

*போலீஸ் துணை கமிஷனர் பேச்சு

Advertisement

நெல்லை : மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி உயர் பதவிகளில் வந்து சாதிக்க வேண்டும் என நெல்லை சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்த நாள் பங்கேற்றுப் பேசிய மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார் கேட்டுக்கொண்டார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் விழா நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சியில் அவர் படித்த வகுப்பறையில் உள்ள பாரதி சிலைக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசண்ண குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி பாரதி படித்த வகுப்பறையில் பாரதி பாடல்களை மாணவிகள் பாடி மரியாதை செலுத்தினர். நிகழ்வுக்கு பள்ளிச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.

தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். இதையடுத்து பாரதியார் சிலைக்கு ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு துணை கமிஷனர் பிரசண்ண குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘ மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜாதி, மதங்களை கடந்து நன்றாக படித்து உயர் பதவிகளில் வந்து சாதிக்க வேண்டும். இதுதான் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும். படிப்பு தான் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

வரும் காலம் வளமாக அமைய மாணவர்கள் படிப்பில் மட்டுமே தனது முழு கவனத்தை செலுத்த வேண்டும். பாரதி படித்த வகுப்பறை இங்கு உள்ளது. இங்கு படிப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்.நிகழ்வில் ஆசிரியர்கள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணியன், முத்துராமன் மற்றும் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement