தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு 93.18% தேர்வர்கள் வருகை: 16,118 பேர் ஆப்சன்ட்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் வெளியிட்டது.

Advertisement

இந்த தேர்வு மூலம் மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்து, அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 410 பேர் பெண்கள், 63 ஆயிரத்து 113 பேர் ஆண்கள் மற்றும் 7 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக 3 ஆயிரத்து 734 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, நேற்று மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேர் வருகை புரிந்து தேர்வு எழுதியுள்ளனர். 16 ஆயிரத்து 118 தேர்வர்கள் வருகை புரியவில்லை எனவும் ஒட்டுமொத்தமாக மாநில அளவில் 93.18 சதவீதம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement