தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர தீ: வனவிலங்குகள் ஓட்டம்

 

Advertisement

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்தன. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள் மட்டுமல்லாமல் சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மலைப்பாம்புகள், ராஜநாகம் உள்ளிட்ட பல வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஸ்ரீ வில்லிபுத்தூர் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக போதிய மழை இல்லை; வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது.

இதனிடையே நேற்று இரவு சுமார் 8 மணியளவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள அழகர்கோவில் வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீப்பிடித்தது. காற்றும் வேகமாக வீசியதால் மளமளவென தீ பரவியது.

தகவலறிந்த ஸ்ரீ வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின்பேரில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களும் உதவி வருகின்றனர். காட்டுத் தீ பரவியதால் வனப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்தன. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

 

Advertisement