தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் சொகுசு பஸ்சில் பயங்கர தீ: 29 பேர் உயிர் தப்பினர்

 

Advertisement

 

திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா பகுதியில் உள்ள விஜயவாடா-ஐதராபாத் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர் உள்பட 29 பயணிகள் பயணம் செய்தனர். வேலிமினேடு என்ற இடத்தில் சென்றபோது சொகுசு பஸ்சில் திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். மேலும் பயணிகள் அனைவரும் கீழே இறங்குமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளியே வந்து உயிர் தப்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கர்னூலில் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் உயிருடன் கருகி இறந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது மீண்டும் பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News