தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடம் அருகே இன்று ஆம்னி பேருந்தில் பயங்கர தீ: பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பூர்: பல்லடம் அருகே இன்று அதிகாலை ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவையிலிருந்து திருச்சி நோக்கி நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 15 பயணிகளுடன் ஆம்னி பேருந்து புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருமாளி என்னும் பகுதியில் வந்தபோது ஆம்னி பேருந்தின் முன்பகுதியில் இருந்து லேசாக புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினார். பயணிகளையும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்க செய்தார்.

Advertisement

சிறிது நேரத்தில் பேருந்தின் இன்ஜினில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரியத் துவங்கியது. பயணிகள் 15 பேரும் பேருந்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்‌. தீயில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News