தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

40க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது: கோவில்பட்டியில் போலீசார் மடக்கினர்

கோவில்பட்டி: தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 4 வழிச்சாலையில நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, அதிலிருந்த 2 பேரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காக்கூர் யாதவர் தெருவை சேர்ந்த சாந்தகுமார் (30), மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் (28) என்பதும், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து இருவரையும் மேற்கு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள் குறித்து போலீசார் கூறுகையில், ‘சாந்தகுமார், தற்போது மதுரை ஆனையூர் விண்வெளி நகர் பகுதியில் குடியிருந்து வந்தார். இவரது நண்பர் சிவகுமார். இவர்கள், காரில் சென்று வீடுகளை நோட்டமிடுவது, ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து இரவு நேரத்தில் கொள்ளையடிப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எப்போதுமே முகமூடி அணிந்தும், கையுறை அணிந்தும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்றனர். மேலும், கொள்ளையடிக்கும்போது எதுவும் சிக்கவில்லை என்றால், ஆத்திரத்தில் அந்த வீட்டின் கதவு, டிவி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சென்று விடுவார்கள்’ என்பதும் தெரியவந்துள்ளது.

இருவரையும் போலீசார் கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார், டூல்ஸ் மற்றும் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement

Related News