மசூதிக்குள் புகுந்து தாக்குவோம் பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: மகாராஷ்டிரா போலீசார் வழக்குபதிவு
Advertisement
அவருடைய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதை தொடர்ந்து அகமத்நகர் மாவட்டம், ஸ்ரீராம்பூர் மற்றும் டோப்கானா போலீசார் ரானேவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசிய ஊடக தொடர்பாளர் வாரிஸ் பதான் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுக்களை ரானே பேசி வருகிறார். எனவே, மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகியோர் ரானே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement