தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மசினகுடி-மாயார் சாலை ஓரத்தில் மரத்தில் சாய்ந்து நின்ற கரடியால் பரபரப்பு

ஊட்டி : மசினகுடி - மாயார் சாலையில், சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் சாய்ந்த படி நின்று கொண்டிருந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.

இவைகள் பகல் நேரங்களிலேயே சில சமயங்களில் சாலைகளில் அல்லது சாலை ஓரங்களில் உலா வருவதால் அவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் இவைகளை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.இந்நிலையில், மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில், சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு கரடி மரத்தில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது. மேலும், அது மரத்தில் தனது உடலை தேய்த்துக்கொண்டும், அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தது.

இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.