தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணத்திற்கு மறுப்பு கிருஷ்ணகிரி அணையில் குதித்த தந்தை, பாட்டி உயிரிழப்பு: தாய், மகள் உயிருடன் மீட்பு

கிருஷ்ணகிரி: ஆந்திர மாநிலம் குப்பம், ஜே.டி.சாலையை சேர்ந்தவர் லட்சுமணமூர்த்தி (50). இவரது மனைவி ஜோதி (40). இவர்களது மகள் கிருத்திகா (20), ஜோதியின் தாயார் சாரதாம்மாள் (75). இவர்கள் 4 பேரும், நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு சுற்றுலா பயணிகள்போல் வந்துள்ளனர். காலை 10 மணியளவில், அணையின் தண்ணீர் வெளியேறும் சிறிய மதகின் முன்புறம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், திடீரென ஒவ்வொருவராக அணையில் குதித்துள்ளனர்.

Advertisement

அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அணையில் குதித்து, அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், கிருத்திகா, அவரது தாய் ஜோதி ஆகியோரை மீட்டனர். மேலும், மூதாட்டி சாரதாம்மாளை மீட்க சென்றபோது, தன்னை காப்பாற்ற வந்தவர்களின் கையை கடித்து விட்டு, நீரில் மூழ்கி விட்டார். இதனால் அவரை மீட்க முடியவில்லை. அதேபோல், லட்சுமணமூர்த்தியையும் மீட்க முடியவில்லை. சிறிதுநேரத்தில் அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கிருத்திகாவுக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு, கடந்த வாரம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், அனைவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement