தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான மணப்பெண் காதலனுடன் டும்டும்டும்: மணக்கோலத்தில் வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பினார்

குமாரபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஷைனி பிரியா (30). கோவையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கும், இரணியல் பகுதியை சேர்ந்த இன்ஜினியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நிச்சயதார்த்தம் முதல் அனைத்து நிகழ்வுகளிலும் ஷைனி பிரியா பங்கேற்றுள்ளார். இவர்களின் திருமணம் நேற்று (7ம்தேதி) தக்கலையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 5ம்தேதி அதிகாலையில் மணப்பெண் ஷைனி பிரியா திடீரென மாயமானார். பெற்றோர் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
Advertisement

தகவலறிந்து மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் மணப்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்காததால் இது குறித்து மணப்பெண்ணின் சகோதரன் சஞ்சீவ் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் இளம்பெண் மாயம் என வழக்குபதிந்து விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று காலை ஷைனி பிரியாவின் செல்போனில் இருந்து, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் வாலிபர் ஒருவருடன், ஷைனி பிரியா மணக்கோலத்தில் இருந்தார். கோயில் ஒன்றில் வைத்து இந்த திருமணம் நடந்துள்ளது.

இந்த போட்டோவை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த மாப்பிள்ளைக்கும், இந்த போட்டோவை அனுப்பி வைத்து மன்னிப்பு கோரி உள்ளார். ஷைனி பிரியா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் கோவையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவையில் உள்ள கோயிலில் வைத்து தான் திருமணம் நடந்துள்ளது. காதல் விவகாரம் தெரிந்தால், பிரச்னை ஆகி விடும் என்று பெற்றோர் பார்க்கும் திருமணத்துக்கு சம்மதிப்பது போல் நடித்து, கடைசி நேரத்தில், வீட்டில் இருந்து வெளியேறி காதலனை ஷைனி பிரியா திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. மணக்கோலத்தில் உள்ள போட்டோவை போலீசாரிடம் காட்டி, தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தற்போது புகார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News