தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் என்பது காலாவதியான நடைமுறை: பேத்திக்கு விபரீத அறிவுரை கூறிய ஜெயா பச்சன்

மும்பை: திருமணம் என்பது காலாவதியான நடைமுறை என்றும் தனது பேத்தியை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் நடிகை ஜெயா பச்சன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்பியுமான ஜெயா பச்சன், எப்போதுமே தனது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் 52 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், பொது நிகழ்ச்சிகளிலும் ஊடகங்களிடமும் கறாராகப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இன்றைய காலக்கட்டத்தின் திருமண வாழ்க்கை குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளன.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தனது பேத்தி நவ்யா நவேலி நந்தா குறித்துப் பேசிய ஜெயா பச்சன், அவருக்குத் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. எனது பேத்தி திருமணம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. அவருக்கு விரைவில் 28 வயதாகிறது. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது.

திருமணம் என்பது டெல்லி லட்டு போன்றது. சாப்பிட்டாலும் கஷ்டம், சாப்பிடாவிட்டாலும் கஷ்டம். எனவே வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ளாமல் அப்படியே மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டாடுங்கள்’ என்று தனது பேத்திக்கு விபரீத அறிவுரை வழங்கினார்.

Advertisement

Related News