தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா: கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பு

Advertisement

பெங்களூரு: திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா ராமண்ணாவை பலரும் பாராட்டும் நிலையில், கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னடம், மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகை பாவனா ராமண்ணாவுக்கு தற்போது 40 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘எனக்கு 20 மற்றும் 30 வயதுகளில் தாய்மை குறித்து பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ஆனால், 40 வயதை எட்டியபோது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் வலுப்பெற்றது. தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். தனியொரு பெண்ணாக நான் எடுத்த இந்த முடிவானது சாதாரணமாக நடைபெறவில்லை.

செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, பல மருத்துவமனைகளை அணுகினேன். திருமணமாகாதவர் என்ற காரணத்தைக் கூறி பலரும் என்னை நிராகரித்தனர். அவர்கள் எனது விருப்பத்திற்கு உதவவில்லை. அனைத்துத் தடைகளையும் தாண்டி, தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். இரட்டைக் குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் எனக்கு புதிய அத்தியாயம் கிடைத்துள்ளது.

மேலும், எனது இந்த முடிவு குறித்து எனது தந்தையிடம் கூறியபோது, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். பெண்ணாகத் தாய்மை அடைவது என்னுடைய உரிமை என்று கூறி எனது தந்தை என்னை ஆதரித்தார். சிலர் எனது முடிவைக் கேள்வி எழுப்பியபோதும், நான் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்தேன்’ என்று கூறினர். இருந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தைக்கு தாயாகும் நடிகை பாவனா ராமண்ணா குறித்து கன்னட, மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Related News