தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்துக்காக தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சமூக நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க தேவைப்படும் 5,640 எண்ணிக்கையிலான 8 கிராம் - 22 காரட் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய வேண்டி, தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தியாளர்கள் / விற்பனையாளர்கள், தங்க ஆபரணங்கள் /தங்க நாணயங்கள் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களிடமிருந்து மின் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

ஒப்பந்தப்புள்ளி படிவம் இன்று முதல் அக்.9ம் தேதி மாலை 03.00 மணி வரை பெறப்படும். ஒப்பந்தப்புள்ளிகள் அக்.9ம் தேதி மாலை 04.00 மணியளவில் மேற்கண்ட விலாசத்தில் ஒப்பந்தப்புள்ளி கூர்ந்தாய்வு குழுவால், சமூக நல இயக்குநர் முன்னிலையில் சமூக நல இயக்குநரகம், சென்னை-05-ல் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை https://tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து இன்று முதல் அக்.19ம் தேதி பிற்பகல் 01.00 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். EMD தொகை ரூ.45,12,000/-னை (ரூபாய் நாற்பத்து ஐந்து இலட்சத்து பன்னிரெண்டாயிரம் மட்டும்) இணையதளத்தின் வாயிலாக (online gate payment) மட்டுமே செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன் கூட்டம் செப்.23ம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement

Related News