தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி

Advertisement

மதுரை: திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர தாக்கலான வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருமணத்திற்கு பின் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டால், விவாகரத்து வழக்குகள் அதிகம் தாக்கலாகின்றன. இதற்கு பாலியல்ரீதியான குறைபாடுகளே காரணம்.

இதனால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. ஐரோப்பா மற்றும் சில அரபு நாடுகளில் திருமணத்திற்கு முன் ஆண், பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோல மருத்துவப் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஸ்ரீமதி ஆகியோர், ‘‘மனுதாரர் குறிப்பிடுவது போல சட்டம் இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது. இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் இவ்வாறெல்லாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement