தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மார்க் தானே வேணும்... 100க்கு 120 மதிப்பெண் வழங்கி ராஜஸ்தான் பல்கலை தாராளம்

ஜோத்பூர்: ஜோத்பூர் பொறியியல் பல்கலைக்கழகம் 100 மதிப்பெண் தேர்வில் 120 மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்பிஎம் பொறியியல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலை சார்பில் பிஇ இரண்டாம் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மாணவர்கள் எழுதிய 100 மதிப்பெண் தேர்வில் அவர்களுக்கு 120 மதிப்பெண்கள் வரை வழங்கி பல்கலை அசத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளில் உள்ள பிழையை பல மாணவர்கள் சுட்டிக்காட்டியபோது, ​​நிர்வாகம் எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் முடிவுகளை நீக்க முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பல்கலை குறித்து அரசிடம் புகார் தெரிவித்தனர். எம்பிஎம் பல்கலைக்கழகம் கடந்த காலங்களிலும் இதே போல் தவறான ரிசல்ட்டை வெளியிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பல்கலை துணை வேந்தரிடமும் புகார் அளித்தனர்.

இதுபற்றி விசாரணை நடத்த ராஜஸ்தானில் உள்ள பா.ஜ அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி எம்பிஎம் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் அஜய் சர்மா கூறுகையில்,‘மதிப்பெண் பதிவிடுதலில் பிழை நடந்தது உண்மைதான். பிழை கவனிக்கப்பட்டவுடன் முடிவுகள் உடனடியாக நீக்கப்பட்டன’ என்றார்.

Advertisement