தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

Advertisement

பொள்ளாச்சி : ஆடிமாத கோயில் விஷேசத்தையொட்டி பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சில மாதமாக சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வாழைத்தார் வரத்து சற்று அதிகமாக இருந்துள்ளது. இருப்பினும், கடந்த சில வாரமாக விஷேச நாட்கள் குறைவால் அனைத்து ரக வாழைத்தார்களின் விலையும் சற்று குறைவாக இருந்தது.

ஆனால், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி தூத்துக்குடி,திருச்சி,ஈரோடு உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்துள்ளது. வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், ஆடி மாத கோயில் விஷேசம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

அதிலும், வரும் 24ம் தேதி ஆடி அமாவாசை என்பதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.

இதில், செவ்வாழைத்தார் (ஒரு கிலோ) ரூ.65 முதல் ரூ.75 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.42க்கும்,பூவந்தார் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.50க்கும், மோரீஸ் ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி மற்றும் நேந்திரன் ஒரு கிலோ ரூ.45க்கும் என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News