தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் னிவாசன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வதனா ஸ்ரீனிவாசன், பாஜ இளைஞர் அணி நிர்வாகி ரூக்மங்நாதன், பார்த்திபன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவி தனலட்சுமி ஏற்பாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி பிரபா, மீனா குமாரி, பொன்னி குமாரி, உமாபதி, மோகன், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். அவர்களை செல்வப்பெருந்தகை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement

தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளின்போது 5 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இது மிகவும் துயரமான சம்பவம். காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்திய விமானப்படை கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது. சென்னையில் மட்டும் நண்பகலில் உச்சி வெயிலில் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இந்த மரணங்களை அரசியலாக்க விரும்பவில்லை. நீர்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் இறந்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். குழந்தைகளின் படிப்பு செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News