தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரியை ஆக்கிரமித்துள்ள காட்டாமணக்கு செடிகள் அகற்றப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Advertisement

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நகரப்பாடி ஊராட்சியில் விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 220 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்பட்டு வந்தது. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு கீழப்புளியங்குடி தாமரை ஏரி, வக்காரமாரி ஏரி மூலம் வரும் உபரிநீரானது சேல்விழி ஏரி மூலம் ஸ்ரீநெடுஞ்சேரி, பவழங்குடி வெள்ளாற்று தடுப்பணையில் கலக்கிறது.

இந்த ஏரி மூலம் இப்பகுதி விவசாயிகள் 1,000 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் விவசாய பம்பு செட்டுகளில் போர்வெல் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஏற்கனவே இந்த ஏரியின் கரை மட்டும் பலப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

தற்போது ஏரியை சரிவர பராமரிக்காததால் ஏரி முழுவதும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் முளைத்து தூர்ந்து உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீரை சேமிக்க முடியாமல் தண்ணீர் வீணாக செல்வதுடன், சுற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் தொடங்கும் முன் ஏரியை ஆக்கிரமித்துள்ள காட்டாமணக்கு செடிகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News