தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடைபயிற்சியின் போது நடந்த சோகம்: 114 வயது மாரத்தான் வீரர் ; பஞ்சாப்பில் விபத்தில் பலி

Advertisement

ஜலந்தர்: தடகள உலகில் ‘டர்பன் டொர்னாடோ’ என்று அழைக்கப்படும் பஞ்சாப்பை சேர்ந்த மூத்த மாரத்தான் வீரர் பவுஜா சிங் (114). தள்ளாத வயதிலும் தளராமல் மாரத்தானில் பங்கேற்று பலருக்கு உத்வேகத்தின் சின்னமாக விளங்கினார். சமீபத்தில், பஞ்சாப் ஆளுநருடன் இணைந்து ‘போதையில்லா பஞ்சாப்’ விழிப்புணர்வுப் பேரணியில் கூட உற்சாகத்துடன் பங்கேற்றார். இவரது வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ‘தி டர்பன் டொர்னாடோ’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இந்நிலையில், பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பியாஸில், நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பவுஜா சிங் யார்?

உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்று அழைக்கப்பட்ட பவுஜா சிங் கடந்த 1911 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது பல சாதனைகளைப் படைத்ததன் மூலம், மாரத்தான் ஓட்டத்தை முடித்த முதல் நூற்றாண்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். லண்டன், நியூயார்க் மற்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற பிரபலமான மாரத்தான்கள் உட்பட பல இடங்களில் அவர் ஓடினார். 2011 ஆம் ஆண்டு அவருக்கு 100 வயதான போது அந்த ஓட்டத்திலும் பங்கேற்றார். மேலும் அவர் தனது வயதினருக்கான பல உலக சாதனைகளை முறியடித்தார். கடந்த ஆண்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவுடன் நடந்த நடைப்பயணத்தில் பவுஜா சிங் கலந்து கொண்டார்.

Advertisement

Related News