தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மராட்டியத்தில் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை சூழ்ந்த பெருவெள்ளம்: 30 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கினர்

மராட்டியம்: மராட்டிய மாநிலத்தில் மிக பலத்த மழையால் வரலாற்று புகழ்பெற்ற ராய்கட் கோட்டையை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் கல்நாய் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருகிறது, இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ரத்தினகிரியில், ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாபூர் தாலுகாவில் உள்ள ஜக்பூதி ஆறு அபாய அளவை தாண்டியதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement

இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க பிரபலமான சுற்றுலாத் தலமான ராய்காட் கோட்டையில் மழைபெய்ததால் அவற்றின் படிகள் நீர்வீழ்ச்சிகளாக மாறியது. இந்த நிலையில் கோட்டைக்கு வருகை தரும் சிவ பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் மலைப்பாதை வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சென்ற மராட்டிய பேரிடர் மேலாண் படையினர் 10 பேரை மீட்ட நிலையில் மேலும் 20 சுற்றுலா பயணிகளை மீட்டு வருகின்றனர். மேலும், கனமழையின் போது கோட்டைகள் மற்றும் பிற ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News