தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானூர் அருகே கானார்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு மழையின்றி சேதமடைந்த உளுந்து பயிருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்

*கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

Advertisement

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மழையின்றி சேதமடைந்த உளுந்து பயிருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மானூர் வட்டார விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலாளர் ஆபிரகாம் தலைமையில் மானூர் வட்டார விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து இருந்தனர். போதிய மழை இல்லாததால் உளுந்து பயிர்கள் சரிவர விளையவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை நேர் செய்யும் வகையில் பயிர் காப்பீட்டுக்கான தொகையை வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் இதனால் வரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

எனவே இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.மானூர் கானார்பட்டி கிராமத்தில் இப்போது 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் மானூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் குழாயில் சென்று தண்ணீர் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கானார்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News