தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement

நெல்லை : மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மானூர், குப்பனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய் பயிர்செய்துள்ளனர். வெண்டைக்காய் விதைகள் பாவிய மூன்று நாட்களில் செடிகள் முளைக்க துவங்கும். அதன்பின்னர் ஒரு மாதத்தில் பூக்கள் பூத்து காய்கள் வைக்கும். காய்கள் ஒரு நான்கு நாட்களில் பரித்து விற்பனை கொண்டு செல்லப்படும்.

தற்ேபாது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பரவலாக பெய்துவருகிறது. இந்த மழையால் மானூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய் செடிகள் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு செடியிலும் அதிகப்படியான பூக்கள், காய்கள் காய்த்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெண்டைகாய் செடிகளில் விளைச்சல் அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினமும் செடிகளிலிருந்து அதிகப்படியான வெண்டைக்காய்கள் பறிக்கப்படுகிறது.

இதனால் வெண்டைக்காய் விலை கிலோவுக்கு ரூ.48க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். மேலும் வரக்கூடிய நாட்களில் வெண்டைக்காய் விலை குறைந்து காணப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய உழவர் சந்தையிலும் வெண்டைக்காய் கிலோ ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement